யுக்ரேன் ஜனாதிபதி வொளாடிமிர் ஷெலன்கி விரைவில் இந்தியா பயணிக்கவுள்ளார்.
அவரது பயண திகதி தொடர்பில் இறுதிக்கட்ட ஆலோசனைகள் இடம்பெற்று வருவதாக இந்தியாவுக்கான யுக்ரேன் தூதுவர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார்.
இந்திய பயணத்தின்போது ரஷ்ய – யுக்ரேன் போர் நிலவரம் குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
யுக்ரேன் ஜனாதிபதியின் இந்திய பயணம் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துமென இந்தியாவுக்கான யுக்ரேன் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
யுக்ரேன் – ரஷ்யா போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் உயிரிழ்ந்து வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிர முனைப்பு காட்டி வருகிறார். மோதல்களுக்கு தூதரக ரீதியில் பேச்சுவாரத்தை மூலம் அமைதி வழியில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடென இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.









