முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறென சுமந்திரன் கூறுவது கவலையளிப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சுமந்திரன் யாழில் இருந்து கதைக்கின்றாரா அல்லது ரணிலின் வீட்டிலிருந்து கதைக்கின்றாரா என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.
கறுப்பு ஜுலைக் கலவரம், நூலகம் எரிப்பு, படுகொலைகள் உட்பட பல சம்பவங்களுக்கு பொறுப்பு கூறவேண்டிய நபர்தான் ரணில் விக்கிரமசிங்க. மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டும் உள்ளது. இப்படிபட்ட நபரை பாதுகாக்கும் விததத்தில் கருத்து வெளியிடுவது கவலையளிப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் சமம். பலம் பொருந்தியவர்களுக்கு எதிராக சட்டம் செயற்படாது என்ற நிலை மாற்றப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க மட்டுமல்ல, எப்படியான நபரும் சட்டத்துக்கு கட்டுப்பட்டே செயற்படவேண்டும். இவ்விடயத்தில் எவரும் விதி விலக்கல்ல எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.









