கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்றைய தினம் 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
கம்பஹா, அத்தனகல்ல மற்றும் மினுவங்கொட கூட்டு நீர் விநியோக கட்டமைப்பின் நிட்டம்புவவிலிருந்து மினுவங்கொட வரையிலான குழாய் , சுத்திகரிப்பு மற்றும் கிருமி நீக்கம் செய்யப்படவுள்ளமையினால் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
அதனடிப்படையில் ரன்பொகுணகம, பட்டாலிய, அத்தனகல்ல, பஸ்யயால மற்றும் நிட்டம்புவ ஆகிய பகுதிகளுக்கு இன்று காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 10 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடைக்காணப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.









