2025 ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
நாடு முழுவதும் 2,787 மத்திய நிலையங்களில் பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற பரீட்சையில் 307,951 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
இந்நிலையில் பரீட்சை பெறுபேறுகளை செப்டம்பர் மாதம் 20 ம் திகதிக்கு முன்னர் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம்10 ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5ம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையர் நாயகம் அறிவித்துள்ளார்.
2025 ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சை 2026 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 திகதி முதல் 26 ம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.









