இலங்கையணி பங்களாதேஸ் அணியிடம் முதன்முறையாக டி – 20 தொடரொன்றை இழந்துள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான டி – 20 தொடரின் மூன்றாவது போட்டி ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பெற்றுக்கொண்டது. பெத்தும் நிசங்க 46 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஓரளவு ஆதரவளித்த போதும், அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்மையினால் இலங்கையணி தடுமாறியது.
இலங்கையணிக்கு ஓரளவு கௌரவமான ஓட்ட எண்ணிக்கையை பெறுவதற்கு தசுன் சானக்க, கமிது மென்டிஸ் ஜோடி கைகொடுத்தது. இறுதி நேரத்தில் தசுன் ச்சானக்கவின் துடுப்பாட்டம் 132 எனும் ஓட்ட எண்ணிக்கையை பெறுவதற்கு மிகப்பெரும் பங்களிப்பை வழங்கியது.
இலங்கையணி 20 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து குறித்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொண்டது. பங்களாதேஸ் அணியின் பந்துவீச்சு மிகச்சிறப்பாக அமைந்திருந்தது.
மேஹிதி ஹசன் 4 ஓவர்களில் 11 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
அவரது பந்துவீச்சே பங்களாதேஸ் அணியின் பக்கம் போட்டியை திசைதிருப்பியது. 133 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி முதல் பந்திலேயே பர்வேஷ் இமோனின் விக்கட்டை இழந்தபோதும் தன்சிட் ஹசனின் வேகமான துடுப்பாட்டம் பங்களாதேஸ் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தியது.
ஆறு 6 ஓட்டங்கள் உள்ளடங்கலாக 47 பந்துகளில் 73 ஓட்டங்களை அவர் பெற்றுக்கொடுத்தார். லிட்டன்தாஸ் 32 ஓட்டங்களையும் தௌஹீட் ரிடோய் 7 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.
16.3 ஓவர்களில் விக்கட்டுகளை மாத்திரம் இழந்து பங்களாதேஷ் அணி போட்டியில் வெற்றி பெற்று தொடரை 2-1 என கைப்பறறியது.
போட்டியின் ஆட்டநாயகனாக மொஹிதி ஹசனும், தொடரின் நாயகனாக லிட்டன் தாசும் தெரிவுசெய்யப்பட்டனர்.
பங்களாதேஸ் அணி 8 வருடங்களின்பின்னர் டி – 20 தொடரொன்றை கைப்பற்றியுள்ளது.









