பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டின்சின் தோட்டப் பகுதியில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுப்பட்ட சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொகவந்தலாவ டின்சின் தோட்டத்திற்கு செல்லும் நடைபாதைக்கு அருகில் தேயிலை தோட்டப் பகுதியில் குழி தோண்டி மாணிக்ககற்கள் அடங்கிய மண்ணை சந்தேகநபர் வீட்டிற்கு கொண்டு சென்று குறித்த மண்ணை கழுவிக் கொண்டிருந்ததாகவும், அதன்போதே அவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 60 அடி வரை குழி தோண்டப்பட்டு அகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சந்தேகநபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.









