மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தொடர்பான பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாகவும், இந்நிலையில் வாகன இலக்கத்தக்கடுகளை மீள வழற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வாகனத்தின் இலக்கத் தகடுகளை பெறுவதற்கு கட்டணம் செலுத்தி அதைப் பெற;றுக்கொள்ளாதவர்கள்? 2024 டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன் இலக்கத் தகடுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
டிசம்பர் 15ம் திகதியின் பின்னர் தற்காலிக இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வீதிகளில் வாகனங்களை செலுத்த முடியாதெனவும், தற்காலிக இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தும் வாகனங்கள் தொடர்பில் பொலிசார் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்களென மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை தற்காலிக இலக்கத் தகடுகளை பயன்படுத்தி வாகனங்களை செலுத்துவதற்கு வழங்கப்பட்ட அனுமதி டிசம்பர் 15ம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.









