இஸ்ரேலுக்கும், லெபனானின் ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் கடந்த 17 மாதங்களாக இடம்பெற்றிருந்த யுத்தம் தற்போது முடிவுக்கு வரும் நிலையை எட்டியுள்ளது. யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, இன்று காலை முதல் யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு , அதனை மீறி செயற்பட்டால், உடனடி பதில் தாக்குதல் மேற்கொள்ளப்படுமென இஸ்ரெல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு தெரிவித்துள்ளார். அமெரிக்கா , ஐரோப்பிய சங்கம், ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட பல தரப்பின் முயற்சிக்கு மத்தியில் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலின் அமைச்சரவையும் யுத்த நிறுத்தத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பணயக்கைதிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீள அழைத்துவருவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், இஸ்ரேல் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.









