அக்கரப்பத்தனை பகுதியை சேர்ந்த இ.தொ.கா ஆதரவாளர்கள் சிலர் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்துடன் இணைந்துக்கொண்டனர்.
ஹட்டனில் இடம்பெற்ற கட்சி முக்கியஸ்தர்களுக்கிடையிலான கலந்துரையாடலின் போதே அவர்கள் தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்து கொண்டனர்.
அக்கரபத்தனை எல்பியன் தோட்ட கமிட்டி முன்னாள் தலைவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குரூப் தலைவருமாகிய சிவக்குமார், தோட்ட கமிட்டி செயலாளர் கிருஸ்ணகுமார் தோன்பீல்ட் தோட்ட முன்னாள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி தலைவர் ரா.சேகர் ,தோட்ட முக்கியஸ்தர்களும் தேசிய தொழிலாளர் சங்கத்தில் இணைந்து கொண்டார்கள்.
இதன்போது தேசிய மண்றாசி நகர் முச்சக்கரவண்டி சாரதிகள் சங்க உறுப்பினர் மு.சந்திரசேகரன், அக்கரபத்தனை தேசிய தொழிலாளர் சங்கத்தின் அமைப்பாளர் இராமநாதன் கலந்து கொண்டதுடன் கலந்துரையாடலில் அக்கரபத்தனை பிரதேச சபை முன்னாள் தலைவரும் சங்கத்தின் உப தலைவருமாகிய இராமன் கோபாலகிருஷ்ணன் கலந்துக்கொண்டார்.









