பரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பெரிசில் நாளை ஆரம்பமாகவுள்ளது.
அதற்கமைய பரா ஒலிம்பிக்தீபம், பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவை இணைக்கும் சன்னல் டன்னல் எனும் கடலுக்கடியிலான சுரங்கப்பாதை வழியே, பிரித்தானியாவிலிருந்து பிரான்சிற்கு கொண்டுசெல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இம்முறை இலங்கையிலிருந்து பரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வதற்கென 8 வீரர்களை உள்ளடக்கிய குழு, பிரான்ஸ் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.









