தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபா வழங்குவதற்கு 7 பெருந்தோட்ட கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தொழிலாளர் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி நாளைய தினம் சம்பள நிர்ணய சபையை கூட்டவுள்ளதாக ஜனாதிபதி கண்டியில் இடம்பெற்ற தோட்டத்தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது குறிப்பிட்டார்.
குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமானால் விசேட சட்டங்களை கொண்டுவர தான் தயாரெனவும், சம்பள விவகாரத்தை தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்வது நியாயமற்றதெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.









