முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு 3 வருட கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றைய குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு கொழும்பு தெமட்டகொடை பகுதியில் இளைஞன் ஒருவரை, தனது டிபென்டர் வாகனத்தின் மூலம் கடத்திச் சென்ற வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதை அடுத்தே நீதிமன்றம் இன்றைய தினம் தீர்ப்பை வழங்கியுள்ளது.









