ஜப்பானில் மிகவும் ஆபத்தான அரிய வகை பெக்டீரியா பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இது பாதித்த இரண்டே நாட்களில் உயிரைப் பறிக்கும் அளவிற்கு மிகவும் ஆபத்தான சதையை உண்ணும் பெக்ரீரியா என தெரியவந்துள்ளது.
ஸ்ட்ரெப்டோகோக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் (Streptococcal toxic shock syndrome) எனப்படும் நச்சு அதிர்ச்சி நோய் பாதிப்பு நச்சுக்களை இரத்த ஓட்டத்தில் பரவச் செய்து உடல் உறுப்புகளுக்கு கடுமையான சேதத்தை விளைவிக்கிறது.
ஜப்பானில் கொரோனா கட்டுப்பாடுகள் சமீபத்தில் முழுவதுமாக தளர்த்தப்பட்ட நிலையில் இந்த சதையை உண்ணும் பெக்டீரியா ஆண்டில் கடந்துள்ள காலப்பகுதியில் 977 பேரை தாக்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த பெக்டீரியா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தொண்டை வறட்சி, காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம், மூட்டுகளில் வலி, வீக்கம் ஆகியவை முதலில் ஏற்படும்.
பின் படிப்படியாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் உறுப்புக்கள் செயலிழப்பு ஏற்பட்டு இறுதியில் மரணத்துக்கு வழிவகுக்கும்.
இந்த உயிரிழப்புகள் அதிகபட்சமாக பெக்டீரியா தாக்கிய 48 மணி நேரத்துக்குள் ஏற்படும் என்று டோக்கியோ மருத்துவக் கல்லூரி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கைகளை சுகாதாரமாக வைத்துக்கொள்வதோடு, ஆரம்பகட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமென வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.









