ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்தில் அவர்கள் பயணித்த ஹெலிகொப்டர் முற்றாக எரிந்துள்ளதாகவும், அதில் பயணித்தவர்கள் உயிருடன் இருப்பதற்கான எவ்வித வாய்ப்புக்களும் இல்லையெனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் மலைப்பாங்கான பகுதியில் பனிமூட்டமான காலநிலை நிலவிய சந்தர்ப்பத்திலேயே விபத்துக்கு முகங்கொடுத்துள்ளது.
கிழக்கு அசர்பைஜான் பகுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரை தேடும் பணிகளில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.









