தாய்லாந்தில் பெண்ணொருவரின் மூக்கிலிருந்து நூற்றுக்கணக்கான புழுக்கள் அகற்றப்பட்டுள்ளன. 59 வயதான பெண்ணொருவர் மூக்கடைப்பு மற்றும் முகத்தில் ஏற்பட்ட வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் பெண்ணின் மூக்கில் உயிருடன் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, பெண்ணின் மூக்கிலிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட புழுக்கள் அகற்றப்பட்டன. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தாய்லாந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.









