அம்பலாங்கொட, கந்த மாவத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க நிரோஷன உயிரிழந்துள்ளார்.
தம்மிக்க நிரோஷன தனது வீட்டின் முன்பகுதியில் நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
2022ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட இலங்கையணியின் தலைவராக உலகக்கிண்ண போட்டிகளின்போது தம்மிக்க நிரோஷன செயற்பட்டுள்ளார்.
உயிரிழக்கும்போது அவருக்கு 41 வயதென பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.









