வெசாக் வாரத்தில் நாடுமுழுவதும் இறைச்சிக்கடைகள் மற்றும் மதுபான சாலைகளை மூடுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பல்பொருள் அங்காடிகளிலும் இறைச்சி விற்பனையை நிறுத்துமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 27ம் திகதி முதல் ஜுன் 02ம் திகதி வரை வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் இறைச்சிக்கடைகள் மற்றும் மதுபான சாலைகளை திறந்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.









