பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் ( PSL )பங்கேற்பதற்கு இலங்கை அணியின் நட்சத்திர வீரர் தசுன் ஷானக்கவுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதுகுறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
2026 ஆண்டுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் லாகூர் கலாண்டர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த தசுன் ஷானக்க, ஒப்பந்தத்தை தன்னிச்சையாக மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில், அவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
34 வயதான தசுன் ஷானக்கவை, லாகூர் கலாண்டர்ஸ் அணி 75 லட்சம் பாகிஸ்தான் ரூபா பெறுமதியில் ஒப்பந்தம் செய்திருந்தது.
இந்நிலையில் தொடரின் இடையே கடந்த மார்ச் 21 அன்று தசுன் ஷானக் திடீரென தொடரிலிருந்து விலகி பின்னர், இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்தார். பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் போட்டிகளிலிருந்து விலகிய தசுன் ஷானக்க , இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் பங்கேற்றதன் காரணமாக இவ்வாறு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் தசுன் ஷானக்க விளையாட முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.









