பொதுமக்கள் தேவையற்ற முறையில் எரிபொருளை பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் QR குறியீட்டுக்கமைய எரிபொருள் விநியோகிக்கப்பட்டாலும், அதனை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பில் மக்கள் கவனம் செலுத்தவேண்டுமென பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அதுகோரல குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை QR குறியீட்டு முறை தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகள் அதிகரித்ததன் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த 1919 துரித அழைப்பு சேவை , தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.
கடந்த வாரத்தில் அதிகளவானோர் ஒரே நேரத்தில் அழைப்புக்களை ஏற்படுத்தியதால் தொழில்நுட்ப நெரிசல் ஏற்பட்டது. தற்போது டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் ICTA நிறுவனம் இணைந்து உடனடியாகத் தொழில்நுட்பக் கொள்ளளவை அதிகரித்துள்ளன.
எனவே பொதுமக்கள் எவ்விதத் தடையுமின்றி 1919 இலக்கத்தைத் தொடர்புகொண்டு முறைப்பாடுகளை முன்வைக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.









