நிலவில் தமக்கான நிரந்தர ஆராய்ச்சி மையமொன்றை நிறுவவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
2030ம் ஆண்டுக்குள் குறித்த ஆராய்ச்சி மையத்தை நிர்மாணிக்கவுள்ளதாகவும், இதற்கென சுமார் 20 பில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நாசா நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
இதனிடையே நிலவை சுற்றி விண்வெளி நிலையமொன்றை அமைப்பது தொடர்பில் ஏற்கனவே நாசா திட்டமிட்டிருந்தது.
எனினும் குறித்த திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளதாக நாசா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.









