பங்களாதேஷில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராஜ்பாரி பிரதேசத்தில் அமைந்துள்ள பஸ் தரிப்பிட முனையத்திலிருந்து பயணித்த பஸ் வண்டி, பத்மா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
விபத்தையடுத்து பஸ்சில் பயணித்த பலர் காணாமல் போயுள்ளதோடு, 23 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பங்களாதேஷின் தலைநகர் டாக்கா நோக்கி பயணிக்கவிருந்த குறித்த பஸ் வண்டியில் சிறுவர்கள் , பெண்கள் என சுமார் 40 பேர் வரை பயணித்துள்ளதாகவும், 7 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பங்களாதேஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.









