அரச பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்ட புதன்கிழமைகளில் பொதுப் போக்குவரத்து சேவைகள் கட்டுப்படுத்தப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி அறிவித்துள்ளார்.
புதன்கிழமைகளில் அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய புதன்கிழைமைகளில் பயணத்தைக் குறைக்குமாறு தனியார் துறைக்கும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.
முடிந்தவரை தங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடுகளைச் செயல்படுத்துமாறு தனியார் துறை நிறுவனங்களை வலியுறுத்திஇ இலங்கை வர்த்தக சபை மற்றும் இலங்கை முதலாளிகள் கூட்டமைப்புடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இது பொதுப் போக்குவரத்திற்கான தேவையை கணிசமாகக் குறைப்பதற்கான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
இதன் விளைவாகஇ பொதுப் போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்படுமெனவும், பொதுமக்கள் அத்தியாவசியப் பயணங்களுக்கு மட்டுமே அவற்றைப் பயன்படுத்த வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்ட புதன்கிழமைகளில் எதிர்பார்க்கப்படும் குறைந்த நடமாட்டத்திற்கு ஏற்ப, வரையறுக்கப்பட்ட போக்குவரத்து சேவைகள் அத்தியாவசிய நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதே கட்டுப்பாடுகளின் நோக்கமாகுமென அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.









