யுத்த நடவடிக்கையின் போது சிவில் உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலுள்ள எரிவாயு உற்பத்தி நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடபில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் மேலும் தெரிவித்துள்ளார்.









