கிராமப்புற பாலம் கட்டுமாணத் திட்டத்தை மேம்படுத்துவதற்கென நெதர்லாந்து அரசாங்கம் மேலதிகமாக 730,000 யூரோ நிதியுதவி வழங்க தீர்மானித்துள்ளது.
இதனூடாக திட்டத்தை சிறப்பாகவும், நேர்த்தியாகவும் முன்னெடுக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.
நாடளாவிய ரீதியில் 162 கிராமப்புற பாலங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனூடாக கிராம -நகர இணைப்பு மற்றும் கிராமப்புர சமூகத்தின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முடியும்.
திட்டத்தினூடாக இதுவரை 151 பாலங்களின் நிர்மாணப்பணிகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.









