வத்தேகம நகரசபையின் முன்னாள் தலைவர் ரவீந்திர பண்டார மற்றும் அவரது நண்பர் லக்ஷித மனோஜ் வீரபாகு ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 15ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் வாகன இறக்குமதி மற்றும் பதிவு உள்ளிட்ட குற்றச்சாட்டில் குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
அத்துடன் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு , மோட்டார் வாகன பதிவுத்திணைக்களத்தில் போலி தகவல்களை வழங்கி பதிவுசெய்யப்பட்ட இரண்டு ஜீப் வாகனங்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
போலியான தகவல்களை வழங்கி, தவறான முறையில் பதிவுகளை மேற்கொண்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, வத்தேகம நகரசபையின் முன்னாள் தலைவர் ரவீந்திர பண்டார மற்றும் அவரது நண்பர் லக்ஷித மனோஜ் வீரபாகு ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த மோசடி நடவடிக்கையுடன் தொடர்புடைய ஏனையோரையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.









