பாடசாலை நேரங்களிலும், வாகன நெரிசல் கூடிய நேரங்களிலும் வீதிகளில் கட்டுப்படுத்துவது குறித்து பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் கனரக வாகனங்களை செலுத்துவதால் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது
நெரிசல் நேரங்களில் கனரக வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் குறித்து பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அமைச்சின் முடிவு கிடைக்கப்பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.









