கைது செய்யப்பட்ட கொழும்பு பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் உதித லியனகேவை செப்டம்பர் 01 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் உதித்த லியனகே குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று கைதுசெய்யப்பட்டார்.
ஏற்கனவே புதையல் தோண்ட முற்பட்ட குற்றச்சாட்டில் பிரதி பொலிஸ்மா அதிபர் உதித லியனகேவின் மனைவி உட்பட 8 பேர் அநுராதபுரம் பொலிஸாரரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
எனினும் தனது மனைவியை உடனடியாக விடுவிக்குமாறும் அநுராதபுரம் பொலிஸாருக்கு சந்தேநபர் தொலைபேசியில் அழுத்தம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்து.
குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில்இ இன்றைய தினம் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.









