பாராளுமன்றத் தேர்தல் செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான காலக்கெடு நாளை நள்ளிரவுடன் முடிவடையவுள்ளது.
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 1985 பேர் மாத்திரமே இதுவரையில் உரிய அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஈ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றையும் விடுத்துள்ளார். தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள 527 வேட்பாளர்களில் 57 பேர் மாத்திரமே அறிக்கைகளை வழங்கியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஈ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.









