சட்டவிரோதமாக புதையல் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பண்டாரவளை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலதொட்டஎல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்போது அகழ்வு உபகரணங்கள் மற்றும் பூஜை பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.









