அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுமென அவுஸ்திரேலிய பிரதமர் எந்தணி அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.
அதற்கு அந்நாட்டின் மாகாண மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கள் ஆதரவுவழங்கியுள்ளன.
அவுஸ்திரேலிய பாராளுமன்றில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்ட வரைபு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு 102 வாக்குகள் ஆதரவாகவும் 13 வாக்குகள் எதிராகவும் கிடைத்துள்ளன. இந்நிலையில் தற்போது குறித்த வரைபு சட்டமாக மாற்றப்படவுள்ளது.









