முன்னாள் அமைச்சர் A.H.M பௌசிக்கு 10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக செயற்பட்ட காலத்தில் அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பணிகளுக்கென நெதர்லாந்திடமிருந்து கிடைத்த சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனத்தை, தனது சொந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியமை,
வாகனத்தின் பராமரிப்பு செயற்பாடுகளுக்கென சுமார் 10 லட்சம் ரூபாவை அமைச்சின் நிதியிலிருந்து செலவிட்டமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் தொடரப்பட்டிருந்த வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்போது ஏ.எச்.எம். பௌசி, சட்டத்தரணி ஊடாக தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
அதற்கமைய அவருக்கு 4 லட்சம் ரூபா தண்டப்பணமும், 10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது,









