சூடானில் பெய்து வரும் பலத்த மழையினால் அந்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 60 பேரின் உயிரிழப்புக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அனர்தத்தில் 20 கிராமங்கள் பாதிக்கபட்டுள்ளன.
சம்பவத்தில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் துறைமுக நகரமான போர்ட் சூடானில் இருந்து வடக்கே 40 கிலோ மீற்றர் (தொலைவில் உள்ள அர்பாத் நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டே உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் குறித்த பகுதி அடையாளம் காண முடியாத அளவிற்கு அழிந்துள்ளதோடு மின்சாரம் மற்றும் தண்ணீர் குழாய்கள் சேதமடைந்துள்ளன.
150 முதல் 200 பேர் வரை காணமல் போயுள்ளதுடன் ஏறக்குறைய 50இ000 பேரின் வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
மீட்புப்பணியாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் தொடர்ச்சியாக மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.









