அவசர காரணங்களுக்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் , பொதுமக்களிடம் குறித்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது.
கடவுச்சீட்டுகள் வழங்குவதை மட்டுப்படுத்த வேண்டியிருப்பதால் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு விநியோகிக்கப்பட்ட வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களில் 23 சதவீதமானவை மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை இலத்திரனியல் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்கென ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் அவற்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பின்னர் நிலைமை வழமைக்கு திரும்புமென எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதியில் கையிருப்பு பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.









