அதிக பெறுமதியான ஹசீஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருளின் பெறுமதி 7 கோடியே 22 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட போது, விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கேகாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்கள் மேலதிக விசாரணைக்காக நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.









