ஈரானை இலக்காக கொண்டுமேற்கொள்ள திட்டமிட்டிருந்த தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் உடன்படிக்கையொன்றை எட்டுவதற்காகவும், பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கிலும் குறித்த தீர்மானம் பெறப்பட்டுள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
நாளை ஈரான் மீது நடத்தவிருந்த தாக்குதலை மேற்கொள்ள வேண்டாமென அமெரிக்க இராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் எனினும், ஏற்றுக்கொள்ளக்கூடிய உடன்படிக்கையொன்றை எட்ட முடியாவிட்டால், உடனடி அறிவித்தலின் மூலம் ஈரான் மீது முழுமையான, பாரியளவிலான அளவிலான தாக்குதலை நடத்துவதற்கு தயாராக இருக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்படிக்கையொன்று மிக அருகில் உள்ளதாக நம்பிக்கை வெளியிட்டிருந்ததுடன், உடன்படிக்கை எட்டப்படாவிட்டால் ஈரான் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படுமென எச்சரிக்கைவிடுத்திருந்தார்.இந்நிலையில் கட்டார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் குறித்ததாக்குதலை தற்காலிகமாக நிறுத்துமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவிற்கும், மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பாலுள்ள அனைத்து நாடுகளுக்கும் மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உடன்படிக்கையை எட்ட முடியுமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.









