நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய சி. ஜோசப் விஜய், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக விரைவில் பதவியேற்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று மாலை வரை இடம்பெற்ற வாக்கு எண்ணிக்கையில் அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்திருந்தது.
233 தொகுதிகளில் போட்டியிட்டு , 108 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் முன்னிலை வகித்துள்ளது.
234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் பெரும்பான்மை இலக்கை அடைய முடியாவிட்டாலும், பெரும்பான்மையைப் பெறுவதற்கு விஜய் சிறிய கட்சிகளின் ஆதரவை நாடலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே திமுக, அதிமுக முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களுக்குத் தள்ளப்பட்டுள்ளன.
விஜய்யின் வெற்றிக்கு இந்தியப்பிரதமர் மோடி உட்பட சர்வதேச ரீதியிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.









