நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் டித்வா புயல் காரணமாக தடைப்பட்டிருந்த வடக்கு மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன.
புயல் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த வடக்கு ரயில் மார்க்கம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, இன்றைய தினம் முதல் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்றைய தினம் முதல் தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட தூரப் பயணங்களுக்காக நாளாந்தம் மேலதிகமாக சுமார் 250 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், விசேட சேவை எதிர்வரும் 13ம் திகதி வரை நடைமுறையில் இருக்குமெனவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை சித்திரை புத்தாண்டுக்கு சென்று மீண்டும் கொழும்பு திரும்புவோருக்காக, ஏப்ரல் 17 முதல் 21ஆம் திகதி வரை விசேட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுமென இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.









