பங்களாதேஸுக்கு இந்தியா 5,000 டொன் டீசலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவிலிருந்து பர்பாத்திபூர் எல்லை வழியாக பங்களாதேஸுக்கு குழாய் மூலம் டீசல் விநியோகம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிடடுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் குழாய் வழியாக இந்தியா, பங்களாதேஸுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் டொன் டீசலை வழங்குவதற்கான ஒப்பந்தம் இர நாடுகளுக்குமிடையில் கைச்சத்திடப்பட்டுள்ளது.
தற்போது குறித்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 5,000 டொன் டீசலை பங்களாதேஸுக்கு வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் 90 ஆயிரம் டொன் டீசல் பங்களாதேஸுக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக பங்களாதேஸpன் பெற்ரோலிய துறை அமைப்பின் தலைவர் முகமது ரெசானூர் ரஹ்மானை மேற்கோளகாட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.









