ஜப்பானில் 7.6 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.
அந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியிலுள்ள ஹோக்கைடோ, அமோரி, இவா ஆகிய பகுதிகளில் நேற்றிரவு சக்திவாய்ந்த நிலஅதிர்வு உணரப்பட்டதையடுத்து , சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் தளர்த்தப்பட்டதாக ஜப்பான் செய்திகள் தெரிவிக்கின்றன.
அமோரி மாகாணக் கடற்கரையில் இருந்து 80 கி.மீ. தொலைவிலும், வடக்கு ஜப்பானிலுள்ள மிசாவா பகுதியில் இருந்து 73 கி.மீ. தொலைவிலும், 50 கி.மீ. ஆழத்திலும் நிலஅதிர்வின் மையப்புள்ளி பதிவானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நிலஅதிர்வையடுத்து கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. இதனால் அச்சமடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இதுவரை சுமார் 30 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் தினங்களில் மேலும் வலுவான நிலஅதிர்வு ஏற்படக்கூடுமென ஜப்பான் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்









