இந்திய மீட்புபக் குழுவினர் இன்று (29) அதிகாலை இலங்கைக்கு வருகைதந்துள்ளனர். இந்திய விமானம் மூலம் குறித்த குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
அவர்களில் நான்கு பெண் மீட்புபணியாளர்களும் 76 ஆண் பெண் மீட்புபணியாளர்களும் உள்ளடங்குகின்றனர்.
நான்கு மோப்ப நாய்களும் மீட்பு நடவடிக்கைகளுக்கு அழைத்துவரப்பட்டுள்ளன.
இதேவேளைகூடாரங்கள், போர்வைகள், சுகாதார தேவைகள்,உடனடியாக உண்ணக்கூடிய உணவு பொதிகள், உள்ளிட்ட 12 டொன் அவசர மனிதாபிமான உதவிகளுடன் இந்திய விமானம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.









