நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இதுவரை 47 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
நேற்றும், இன்றும் மாத்திரம் 37 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் 1729 குடும்பங்களை சேர்ந்த 5893 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் 23 மரணங்கள் பதிவாகியுள்ளதோடு, 5 பேர் காணாமல் போயுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 6 மரணங்கள் பதிவாகியுள்ளன.
கண்டி மாவட்டத்தில் 3 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், மண்சரிவில் சிக்குண்ட மேலும் சிலர் ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளிலும் சீரற்ற காலநிலையால் பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.









