2025 ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை முன்னிட்டு எதிர்வரும் 7ம் திகதி நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
எதிர்வரும் 10 ம் திகதி ஆரம்பமாகும் உயர்தர பரீட்சைகள் டிசம்பர் 5 ம் திகதி வரை நடைபெறவுள்ளது
இந்நிலையில் டிசம்பர் 8 ம் திகதி பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மீள ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து 2026 ஜனவரி முதலாம் திகதி புதிய கல்வியாண்டுக்காக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.
தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளில் 2026 ஜனவரி முதலாம் திகதி முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகி பெப்ரவரி 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
பெப்ரவரி 14 முதல் மார்ச் 2ம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 3ம் திகதி முதல் ஏப்ரல் 10ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
அதனையடுத்து ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 19 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இரண்டாம் தவணை ஏப்ரல் 20ம் திகதி ஆரம்பமாகி ஜூலை 24ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
மூன்றாம் தவணையின் முதற்கட்டம் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 7ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
ஆகஸ்ட் 8 முதல் செப்டெம்பர் 6ம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டெம்பர் 7ம் திகதி முதல் டிசம்பர் 4ம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது









