2026 ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரம் மேலும் 30 நிமிடங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பிற்பகல் 2 மணி வரை பாடசாலை கல்வி நடவடிக்கைகளை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லையென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது பிற்பகல் 1.30 மணி வரை இருக்கும் பாடசாலை நேரம்இ புதிய சீர்திருத்தத்தின் கீழ் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை 30 நிமிடங்கள் நீடிக்கப்படவுள்ளது.
குறித்த தீர்மானத்திற்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையிலும் அமைச்சு இந்த உறுதியை வழங்கியுள்ளது.
கல்விச் சீர்திருத்தங்களை தேசிய கல்வி நிறுவகம் மட்டுமே வடிவமைப்பதாகவும்இ தாங்கள் இதில் நிபுணர்கள் அல்ல என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவேவ தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி நிறுவகம் முதலில் ஒரு பாட நேரத்தை ஒரு மணிநேரமாக நீடிக்க முன்மொழிந்த நிலையில்இ நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டுஇ ஒரு பாட நேரம் 50 நிமிடங்களாக குறைக்கப்பட்டது.
இதன் காரணமாகவே பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சீர்திருத்தங்கள் தேசிய கல்வி நிறுவகத்தின் பரிந்துரைகளின்படி செயல்படுத்தப்பட வேண்டும் என்றும்இ அதன் முக்கிய கொள்கைகளை மாற்ற முடியாது என்றும் செயலாளர் நாலக்க கலுவேவ தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்களுக்குத் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த உரிமை உண்டுஇ ஆனால் திட்டமிடப்பட்டதை நம்மால் மாற்ற முடியாது. இந்த நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட செலவு ஏற்கப்பட்டுள்ளது.
எனவேஇ பாடசாலை நேரத்தை 2 மணி வரை நீடிப்பதில் மாற்றம் இல்லை. அது அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும்இ என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.









