முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை இலஞ்சம், ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலமளித்துள்ளார்.
சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வரை அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பி.ப 2.00 மணியளவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழுவிலிருந்து வெளியேறி சென்றுள்ளார்.
சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









