வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் இன்றைய தினம் ஈடுபட்டனர்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் பணியாற்றுகின்ற யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இடமாற்றம் வழங்ககோரி போராட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வெளி மாவட்ட சேவை காலத்தை நிறைவு செய்து பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், உரிய பொறிமுறையின் கீழ் இதுவரை இடமாற்றம் வழங்கப்படவில்லை என தெரிவித்தே ,தொழிற்சங்க நடவடிக்கையை அவர்கள் முன்னெடுத்தனர்.
அதன்போது வடமாகாண ஆளுநரை சந்திப்பதற்காக மூவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாகவும், பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடி மகஜர் ஒன்றையும் கையளித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.









