நாகொட, அளுத்தனாயமாகொட பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்த 23 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாகொட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட துப்பாக்கி, பேனா வடிவத்தில் காணப்படுவதாகவும் , ஒரு தோட்டாவை மட்டும் பயன்படுத்தி ஒரு சந்தர்ப்பத்தில் சுடக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள குறித்த துப்பாக்கி அரை தானியங்கி ஆயுதமெனவும் கைது செய்யப்பட்டபோது சந்தேகநபரிடம் இரண்டு தோட்டாக்கள் மற்றும் ஐந்து பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மாபலகம பிரதேசத்தை குறித்த சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் விசாரணைக்காக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.









