முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை தங்காலை பொலிஸ் நிலையத்தில் நாளையதினம் திங்கள்கிழமை (6) ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நாளை காலை 10 மணிக்கு அவர் பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பெலியத்தே சனா’ எனும் நபர் தொடர்பில் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்கில் பொலிஸ் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.









