பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இஷாக் டார் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்களாதேஸ் தலைநகர் டாக்காவிற்கு வரலாற்று சிறப்புமிக்க விஜயத்தை மேற்கொண்டனர்.
பங்களாதேஸ் வெளிவிவகார ஆலோசகர் தௌஹீத் ஹொசைன் உட்பட முக்கிய அதிகாரிகளுடன் , பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
தெற்காசிய நாடுகளுடனான உறவை மீட்டெடுக்கும் நோக்கில் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இஷாக் டார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
பாகிஸ்தானும், பங்களாதேசும் தற்போது நெருங்கிவரும் நிலையில் இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.









