முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு இன்றையதினம் (26) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் ரணில் விக்ரமசிங்க, கடந்த 22ம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில், இன்றுவரை அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதற்கமைய அவருக்கு எதிரான வழக்கு , கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
வழக்கில் சட்டமா அதிபரை பிரதிநிதித்துவப்படுத்தும் கூடுதல் மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைக்கவுள்ளார்.
அத்துடன் சந்தேகநபரான ரணில் விக்ரமசிங்க சார்பில் சுமார் 300 பேர் கொண்ட வழக்கறிஞர்கள் குழு முன்னிலையாகவுள்ளது.
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.









