காசா முனையத்தின் தென்பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வெளி தாக்குதலில் 5 ஊடகவியலாளர்கள் உட்பட 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
கான் யூனிஸ் நகரிலுள்ள நாசிர் வைத்தியசாலை வளாகத்திலேயே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுகாதாரத்துறை அதிகாரிகள் , ஊடகவியலாளர்கள் மற்றும் மீட்புப்பணியாளர்கள் கூடியிருந்த வைத்தியசாலை வளாகத்திற்குள் முதலாவது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்த ஊடகவியலாளர்கள் Associated Press, Reuters, Al Jazeera மற்றும் Middle East Eye உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களில் பணியாற்றியவர்களென தெரியவந்துள்ளது.
ரொய்ட்டர்ஸ் செய்தி சேவையின் புகைப்படக்கலைஞர் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
இந்நிலையில் நடத்தப்பட்ட தாக்குதல் பொதுமக்களையும், ஊடகவியலாளர்களை இலக்காக கொண்டதல்ல என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.









